கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராக்கி பாய் யாஷிற்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், அப்படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “கே.ஜி.எஃப் 2 அற்புதமான ஒன்றாகும், விரைவில் மற்றொரு மான்ஸ்டரும் காத்திருக்கிறது. கனவு கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற எங்கள் ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும்” என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... இதென்னப்பா பகல் கொள்ளையா இருக்கு... துணிவு, வாரிசு படத்தின் FDFS டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா?