ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவரை பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.
விபத்துக்கு பின் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா, பின்னர் படிப்படியாக அதிலிருந்து குணமடைந்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலையில், தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். விபத்துக்கு பின் அவர் வாங்கியுள்ள முதல் கார் இதுவாகும்.