பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த கிட்ட தட்ட 80 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி நாட்களை நெருங்கி வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், ஏடிகே, கதிரவன், மைனா, ரச்சிதா, ஷிவின், அமுதவாணன் மட்டுமே உள்ளனர்.
கடந்த வாரம் அசீமுக்கு எதிராக அவர் ஆற்றிய உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற போட்டியாளர்களில் ரச்சிதா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் ரக்ஷிதா வெளியேறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிக்பாஸ் டைட்டில் வாங்கும் போட்டியாளர்கள் பட்டியலில் ரச்சிதா பெயரும் இடம்பெற்ற நிலையில், இவர் திடீர் என வெளியேறியதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் ஆர்மியை சேர்ந்தவர்களை கவலையடைய செய்துள்ளது.