சின்னத்திரையில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தும் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.
நடனத்தில் மட்டுமின்றி படிப்பிலும் செம சுட்டி தான் சாய் பல்லவி. ஜார்ஜியாவில் இருதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டம் பெற்றவர்.
இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், சாய்பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் ,போன்ற மொழிகளில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் நடித்த படங்களும், அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் இணைந்தது மட்டுமின்றி... இவர் ஒவ்வொரு படத்திலும் ஆடும் டான்ஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. எனவே மிகவும் பிஸியான நடிகையாக மாறினார் சாய் பல்லவி.
இந்நிலையில் சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கோத்தகிரி பகுதியில் உள்ள படுகா இனத்தை சேர்ந்த இவர், தன்னுடைய பாரம்பரிய உடையில் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் வெளியாகி உள்ளது.
நடிகை ஷகிலாவுக்கு உதவி செய்த காமெடி நடிகர் கஞ்சா கருப்பு!
படுகா இனத்தில் இருந்து, முதல் முறையாக திரையுலகில் நுழைந்து, சாதனை படைத்து வரும் நடிகை சாய் பல்லவி என்பதும் குறிப்பிடத்தக்கது.