மலைவாழ் மக்களான பழங்குடியினரின் வாழ்க்கையையும், கொண்டாட்டத்தையும், அவர்களின் தெய்வ வழிபாட்டையும் பிரதீபலித்த காந்தாரா, நில ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நிலக்கிழார்களின் சாதிய ஒடுக்குறைக்கு பழங்குடியினர் ஆளாவதும், அவர்களது தேவைக்காக ஏமாற்றப்படுவதும், பலியாவதும் என ஒடுக்கப்பட்டோரின் போராட்டத்தையும் வலியையும் ஆணித்தனமாக பதிவு செய்திருந்தது இப்படம்.
ஆரம்பத்தில் கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட காந்தாரா படத்துக்கு பிற மாநிலங்களிலும் கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழு, இப்படத்தை தமிழ் உள்பட பிற மொழிகளிலும் டப் செய்து கடந்த மாதம் வெளியிட்டது படக்குழு. இதன்மூலம் அதிகப்படியான வசூலை ஈட்டத்தொடங்கிய காந்தாரா சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியது.
இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டாரை மெர்சலாக்கிய காந்தாரா... ரஜினியின் காலில் விழுந்து நன்றி சொன்ன இயக்குனர் ரிஷப் ஷெட்டி