ஆராய்ச்சி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் வாரிசு பட பிரச்சனை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : “விஜய்யும், அஜித்தும் பெரிய ஹீரோக்கள். அதில் விஜய் படத்துக்கு 300 தியேட்டரும், அஜித் படத்துக்கு 800 தியேட்டர்லாம் கொடுக்க மாட்டாங்க. அது மனசாட்சி இல்லாத செயல். இரண்டு படங்களுக்கும் 50 சதவீத தியேட்டர்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
வாரிசு படத்தின் தயாரிப்பாளரும் தெலுங்கு, இயக்குனரும் தெலுங்கை சேர்ந்தவர். அங்குள்ள ஹீரோக்கள் அவர்களுக்கு நன்கு ஒத்துழைப்பு தரும்போது அவர்கள் ஏன் தமிழ் ஹீரோக்களுக்கு சம்பளத்தை உயர்த்து கொடுத்து தமிழ் சினிமா மார்க்கெட்டை கெடுக்கிறார்கள். தற்போது 25 கோடி அதிகமா கொடுத்துட்டா அந்த ஹீரோ அடுத்து தமிழ் தயாரிப்பாளருக்கு படம் பண்ணும்போது 25 கோடி குறைப்பாரா. என் கவலை அதுதான்.
வாரிசு படம் தெலுங்கில் நிச்சயம் ரிலீஸ் ஆகும். 35 சதவீத தியேட்டர்கள் அங்கு வாரிசு படத்துக்கு ஒதுக்கப்படும். விஜய்க்கு அங்க அவ்வளவுதான் மரியாதை. தமிழ் ஹீரோக்கள் ஆந்திரா பக்கம் போனதே தப்பு. தமிழ் ஹீரோக்கள் தமிழ் தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள். இங்க 25 ஆயிரம் தொழிலாளர்கள் இதை நம்பி இருக்கிறார்கள். பல கோடி சம்பளம் தருகிறார்கள் என்று ஐதராபாத், மும்பையில் ஷூட்டிங் வைத்துக் கொள்கிறீர்களே உங்களுக்கெல்லாம் என்ன தமிழ் பற்று இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் தமிழ் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள்” என அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்... 'வாரிசு' பட படப்பிடிப்பில் கைகலப்பு! வெறித்தனமாக தாக்கப்பட்ட செய்தியாளர்கள்? என்ன காரணம்..! வெளியான உண்மை!