அதற்கான தீவிர பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும், பல்வேறு விஷயங்களை இந்த படத்திற்காக சேகரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் அடுத்தபடியாக வெளியாகும் "காந்தாரா" திரைப்படம், 2022 ஆம் ஆண்டு வெளியான படத்தின் Prequel திரைப்படமாக இருக்கும் என்றும் கூறினார். அதாவது அந்த திரைப்படத்தில் நடந்த கதைக்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற கதையாக காந்தாரா படத்தின் அடுத்த பாகத்தின் கதை உருவாக உள்ளது என்றார் அவர். இந்த சூழலில் விறுவிறுப்பாக அந்த பணிகளை மேற்கொண்டு வந்த நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் செட்டி, தன்னுடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து காந்தாரா படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ளது.