"அதெல்லாம் நல்லா தொல்லை கொடுப்பார்" தனுஷ் நயன்தாரா விவகாரம் - மீண்டும் ஆக்ஷனில் இறங்கிய சுசித்ரா!

Ansgar R |  
Published : Nov 17, 2024, 04:42 PM IST

Suchitra : தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரத்தில் இப்பொது தனுஷுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சுசித்ரா.

PREV
14
"அதெல்லாம் நல்லா தொல்லை கொடுப்பார்" தனுஷ் நயன்தாரா விவகாரம் - மீண்டும் ஆக்ஷனில் இறங்கிய சுசித்ரா!
Suchitra

தமிழ் திரையுலகில் இப்போது கங்குவா திரைப்படத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டு வருவது தான் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்டிருக்கும் மோதல். விரைவில் Netflix தளத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் கதை ஒரு எபிசோடாக வெளியாக உள்ள நிலையில், அதில் தனுஷ் தயாரிப்பில் உருவான "நானும் ரௌடி தான்" திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை பயன்படுத்த சுமார் 10 கோடி ரூபாய் தனுஷ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாகவும், அது மட்டுமல்லாமல் நயன்தாராவிற்கு அது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் நயன்தாரா, நடிகர் தனுசை வசை பாடி ஒரு மிகப்பெரிய பதிவினை வெளியிட்டார். அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் "வாழு வாழ விடு" என்கின்ற தலைப்பில் தனுஷை எதிர்த்து சில பதிவுகளை போட்டு இருந்தார். இந்த சூழலில் நயன்தாராவுக்கு ஆதரவாக ஐஸ்வர்யா ராஜேஷ், அனுப்பமா, ஸ்ருதிஹாசன் மற்றும் நஸ்ரியா நசீர் உள்ளிட்ட நடிகைகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு, ஹன்சிகாவிற்கு மட்டுமில்ல சமந்தாவுக்கும் கோயில் இருக்கு; எங்க இருக்கு, யார் கட்டியது?

24
Vignesh Shivan

இப்படி திரை உலகினர் சிலர் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் நடிகர் தனுஷுக்கு தான் ஆதரவு தெரிவித்து வந்தார்கள். ஒரு தயாரிப்பாளராக அந்த திரைப்படத்தின் முழு உரிமமும் தனுஷ் இடம் தான் இருக்கிறது. ஆகையால் அவர் அந்த தொகையை கேட்பதில் எந்த தவறும் இல்லை. உங்களுடைய சீப் பப்ளிசிட்டிக்காக இப்படி பொதுவெளியில் நடிகர் தனுஷை அவமானப்படுத்துவது தவறு. 

அதேபோல தானே முயன்று உழைத்து உயர்ந்த ஒருவரை, தன்னுடைய தந்தை மற்றும் அண்ணனின் தயவால் உயர்ந்தவர் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஏற்புடையது அல்ல என்றும் கூறியிருந்தனர். இது ஒரு புறம் இருக்க எஸ்.எஸ் குமரன் என்கின்ற தயாரிப்பாளர், விக்னேஷ் சிவன் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். தன்னிடம் இருந்த எல்ஐசி என்கின்ற தலைப்பை தன்னிடம் உரிமம் பெறாமலேயே அவர் இப்போது வரை பயன்படுத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.

34
Nayanthara

இந்த சூழலில் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே உள்ள பிரச்சனையில் உள்ளே நுழைந்து இருக்கிறார் பிரபல பாடகி சுசித்ரா. ஏற்கனவே பல சர்ச்சையான விஷயங்களை பேசி ட்ரெண்டிங்கில் இருந்து வந்த சுசித்ரா, நடிகர் தனுஷ் மீது பலமுறை பல வகையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்றும் கூட பல மேடைகளில் அவர் பகிரங்கமாக கூறியது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் ஒருவர் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக திரும்பினாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை உண்மையை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று பல மேடைகளில் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சுசித்ரா பேசுகையில்.. நடிகர் தனுஷ் நடிகைகளுக்கு டார்ச்சர் கொடுப்பது என்பது அவருடைய இயல்பு. திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு கூட அவர் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

44
Singer Suchitra

சிலருக்கு அந்தரங்க தொல்லைகள், சிலருக்கு தொழில் ரீதியாக அவரும் தொல்லைகள். இது மட்டுமல்ல தனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவருடைய இமேஜை உடைக்க தனுஷ் என்ன வேண்டுமானாலும் செய்வார். எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் நடந்து கொள்வார் என்று சுசித்ரா கூறி இருக்கிறார். இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று, "தனுஷ் ஒரு சைக்கோ என்பதால் அவர் கொடுக்கும் டார்ச்சர்கள் வித்தியாசமானதாக இருக்கும். முடிந்தால் நீ சீக்கிரம் செத்துவிடு" என்று தனுஷை கடுமையாக சாடி பேசி இருக்கிறார் சுசித்ரா. என்ன தான் ஒரு நடிகர் மீது வண்ணம் இருந்தாலும், பொது வெளியில் இப்படி பேசுவது நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்றும், சட்ட ரீதியாக சுசித்ரா மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தனுஷின் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே 1000 கோடி வசூல் அள்ளிய இந்த ஜீரோ பிளாப் இயக்குனர் யாரென்று தெரிகிறதா?

Read more Photos on
click me!

Recommended Stories