திரைப்படங்கள் மட்டுமல்லாது சில தொலைக்காட்சி தொடர்களையும் பாலச்சந்தர் இயக்கி இருக்கிறார். திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என பல துறைகளிலும் முத்திரை படைத்த பாலச்சந்தர், 1965-ம் ஆண்டு தான் இயக்கிய முதல் திரைப்படமான நீர்க்குமிழியிலேயே வித்தியாசமான திரைக்கதை மூலம் தனது முத்திரையை ஆழமாக பதித்தவர் ஆவார்.
அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். மகாகவி பாரதியாரின் கவிதைகள் மீது தீராத பற்று கொண்ட பாலச்சந்தர், அவரின் வரிகளுக்கு திரை வடிவம் கொடுத்தார். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர், தன் படங்களில் சமுதாயத்திற்கான நற்செய்தி இருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.
இதையும் படியுங்கள்... 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள... பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்