20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 15-ந் தேதி தொடங்கியது. இதில் 51 நாடுகளைச் சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் 12 படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் 3 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், வெற்றிபெற்ற படங்களுக்கு விருதுகளை வழங்கினார்.