Vijay : அந்த ஒரு காரணத்துக்காக பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த விஜய்... அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா?

First Published Jul 12, 2022, 10:05 AM IST

Vijay : இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்க முயற்சித்தபோது அதில் நடிகர் விஜய்யையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்.

இயக்குனர் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை பல வருட போராட்டங்களுக்கு பின் ஒருவழியாக எடுத்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... கையில் சிகரெட் உடன் ஸ்டைலாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியு, குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இவர்களது கேரக்டர் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் இப்படத்தின் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்... பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட்ரி..கொதித்தெழுந்த ரசிகர்கள்... வேண்டுகோள் விடுத்த மாதவன்!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... nayanthara marriage photos : பின்வாங்கிய பிரபல நிறுவனம்..கடுப்பாகி திருமண புகைப்படங்களை வெளியிடும் நயன்தாரா!

பொன்னியின் செல்வன் படத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்க முயற்சித்தபோது அதில் நடிகர் விஜய்யையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். இதில் அவர் வந்தியத்தேவன் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இதில் கமிட் ஆகிவிட்டால் இப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது, அதிக நாள் கால்ஷீட் தர வேண்டும் என மணிரத்னம் கூறியதால், இது நமக்கு செட் ஆகாது என விஜய் விலகி விட்டாராம். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். 

click me!