அதன் பிறகு அருணிடம் வந்த ரவீந்தர் ஒவ்வொருவரிடமும் முன்னும் பின்னும் பேசுவதாக கூறினார். இன்னோசண்ட் மாதிரி நடிக்கிற, தெளிவாக விளையாட என்றார். சத்யாவிடம் இங்கு மைண்ட் தான் முக்கியம் என்றார். விஷாலிடம் வந்த ரவீந்தர், சமையல் நல்லா இல்ல, நீ உனக்காக யோசிக்க வேண்டும். ஒரே ஒரு எண்டர்டையினர் நீ மட்டும் தான் என்றார்.
ஜெஃப்ரியிடம் வாய வார்த்தையை கவனாக பயன்படுத்து என்றார். பவித்ரா, பாய்ஸ் அணியில் இருக்கும் போது நீ உண்மையாகவே இல்லை என்றார். முத்துக்குமரன் உன்னிடம் தான் அறிவும், ஆற்றலும் இருக்கிறது. நான் உன்னை நம்புகிறேன். வியூகம் அமைத்துக் கொள் என்றார். சவுந்தர்யாவிடம் பெஞ்ச தேய்க்கிறத நிறுத்து. தர்ஷா நீ விளையாடுறது போலியான விளையாட்டு.
சுனிதாவிடம் வந்த ரவீந்தர் ஹானஸ்ட் ரியல் நீ. தமிழ்நாடு உன்னை நிச்சயமாக கொண்டாடும். அன்ஷிதா கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்து. தர்ஷிகா, நீ செம்ம கேடி என்றார். டுவிஸ்ட் கொடுப்பது கில்லாடி. சாச்சனா தேவைப்படும் போது பேசு. ஜாக்குலின் கேம் புரிஞ்சு விளையாடு என்றார்.
ஆனந்தி நல்ல மனிதநேயம் கொண்ட பெண். பயப்படாதே. சனிக்கிழமையில் ஸ்கோர் பண்ணுவது பெரிய விஷயமே இல்ல, 5 நாளும் ஸ்கோர் பன்னனும் என்றார். இப்படி ஒவ்வொருத்தர் பற்றியும் விமர்சனம் செய்த கையோடு வீட்டிற்கு நடையை கட்டினார். எஞ்சிய 17 போட்டியாளர்களில் அடுத்த வாரம் வெளியேறப் போவது யார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.