தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிரஞ்சீவி. இவரின் மகன் ராம்சரணும் தற்போது டோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை ராஜமவுலி இயக்கி இருந்தார்.
இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ஆர்.சி.15 என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி ராம்சரண் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் போட்டிருக்கும் வரிக்குதிரை டிசைன் சட்டையின் விலை கிட்டத்தட்ட ரூ.2 லட்சமாம்.