Published : Apr 08, 2025, 04:29 PM ISTUpdated : Apr 10, 2025, 12:47 PM IST
ராமராஜனும், நளினியும் சேர்ந்து விட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வரும் நிலையில், இதுகுறித்து வெளிப்படையாக ராமராஜன் தற்போது பேசியுள்ளார்.
Ramarajan, Nalini Reunion for Kids: What is the truth? சினிமாவில் துணை இயக்குனராக இருந்து, பின்னர் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி நடிகரானவர் தான் ராமராஜன். 'மீனாட்சி குங்குமம்' படம் மூலமாக அறிமுகமான ராமராஜன் 'நம்ம ஊரு நல்ல ஊரு' படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு பின்னர் எங்க ஊரு பாட்டுக்காரன், நேரம் நல்லா இருக்கு, என்னை விட்டு போகாதே, எங்க ஊரு காவல்காரன், செண்பகமே செண்பகமே, வில்லு பாட்டுக்காரன், கரக்காட்டக்காரன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் கிராமத்து கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
26
வீட்டை எதிர்த்து திருமணம்:
நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டை எதிர்த்து தான் ராமராஜன் நளினி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இவரின் திருமணம் எம்ஜிஆர் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இவர்களுக்கு உள்ளனர். 1987 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் 2000 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர்.
46
இருவரும் ஒருவருக்கொருவர் தவறாக சொன்னது கிடையாது:
எனினும், நளினி தனது கணவர் ராமராஜனை இன்னமும் காதலித்து வருவதாக தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் கூறி வருகிறார். இதே போன்று தான் ராமராஜனும் நளினி மீது அன்பும், மரியாதையும் வைத்திருப்பதாக கூறி வருகிறார். அதுமட்டுமின்றி எந்த ஒரு இடத்திலும் இருவரும் யாரையும் ஒருவருக்கொருவர் தவறாக பேசியதோ, எந்த குறையும் சொன்னது கிடையாது.
இந்த நிலையில் தான் ராமராஜன் மற்றும் நளினி இருவரும் மீண்டும் சேர்ந்துவிட்டதாக தகவல் பரவி சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், இதற்கு ராமராஜன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது இவர்கள் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்காக மீண்டும் சேர்த்து வாழ முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில் தான் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறுகையில்... "நடக்காத ஒரு விஷயத்தை ஏன் இப்படி பேசுகின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. நானும் நளினியும் இணைந்து விட்டோம் என்பதில் துளியும் உண்மை இல்லை. இனிமேல் நடக்கவே நடக்காத ஒரு விஷயம் இப்படி உண்மை போல் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
66
எங்கள் இருவரின் மனதும் வருத்தமடைகிறது:
நாங்கள் பிரிந்து 25 வருடங்கள் கடந்துவிட்டது. தனியாக வாழ பழகி விட்டேன். இதுபோன்ற வதந்திகளால் எங்கள் இருவரின் மனதும் வருத்தமடைகிறது. எங்களுடைய பிள்ளைகளும் இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே இது போன்ற வதந்தியை கிளப்பும் நபர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.