என்னால் அமைச்சர் பதவியை இழந்தார் ஆர்.எம்.வீரப்பன் - பிளாஷ்பேக் சொல்லி ஃபீல் பண்ணிய ரஜினி!
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மறைந்து ஓராண்டு ஆகும் நிலையில், அவரைப் பற்றிய நினைவுகளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மறைந்து ஓராண்டு ஆகும் நிலையில், அவரைப் பற்றிய நினைவுகளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
Rajinikanth Says About RM Veerappan : தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவராக வலம் வந்தவர் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து நான் ஆணையிட்டால், காவல்காரன், ரிக்ஷாக்காரன், இதயக்கனி என எம்.ஜி.ஆர் நடித்த பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தயாரித்த அவர், பின்னர் ரஜினிகாந்தை ஹீரோவாக வைத்து மூன்று முகம், தங்கமகன், ஊர்க்காவலன், பணக்காரன், பாட்ஷா என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்தார்.
ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாள்
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ந் தேதி காலமானார். அவர் மறைந்து ஓராண்டு ஆகும் நிலையில், அவரது நினைவு நாளான இன்று அவரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி இருக்கிறார். அதில் ரஜினிகாந்த் கூறியதாவது : என் மீது அன்பு காட்டியவர்கள் 3, 4 பேர். அவர்களில் பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரும் அடங்குவர். இவர்களெல்லாம் தற்போது நம்மிடம் இல்லை என நினைக்கும் போது கஷ்டமா இருக்கும். அவர்களை ரொம்ப மிஸ் பண்றேன்.
ஜெயலலிதாவை எதிர்த்து பேசிய ரஜினி
பாட்ஷா படத்தின் 100வது நாள் விழாவில் நான் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசினேன். அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனும் மேடையில் இருந்தார். ஒரு அமைச்சரை வைத்துக் கொண்டு அதைப்பற்றி மேடையில் பேசக்கூடாது. ஆனால் அந்த சமயத்தில் அந்த அளவுக்கு தெளிவு என்னிடம் இல்லை. நான் அவ்வாறு பேசிய பிறகு புரட்சித் தலைவி ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டார்.
இதையும் படியுங்கள்... தமிழ் சினிமா, அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்த ஆர்.எம்.வீ.. எம்.ஜி.ஆருக்கு ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?
ரஜினியால் பறிபோன அமைச்சர் பதவி
வெடிகுண்டு பத்தி ரஜினி அரசுக்கு எதிராக பேசும்போது எப்படி நீங்க அமைதியா இருந்தீங்க என சொல்லி ஆர்.எம்.வீரப்பனை பதவியில் இருந்து ஜெயலலிதா தூக்கிவிட்டார். அது தெரிஞ்சதும் நான் ஆடிப்போய்டேன். என்னால இப்படி ஆகிடுச்சே என ரொம்ப ஃபீல் பண்ணுனேன். இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரல. பின்னர் மறுநாள் காலையில் ஆர்.எம்.வீரப்பனுக்கு போன் போட்டு மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் ஒன்னுமே நடக்காதது போல், என்னிடம் பேசினார்.
ரியல் கீங்மேக்கர் ஆர்.எம்.வீரப்பன்
என்னால் அவரின் அமைச்சர் பதவி பறிபோனதே என்பது ஒரு தழும்பு போல் என்னுள் உள்ளது. அது எப்பவுமே போகாது. பாட்ஷா நிகழ்ச்சியில் நான் தான் கடைசியாக பேசினேன். அதன்பின் அவர் எப்படி பேச முடியும். பின்னர் ஒரு நாள், அவரிடம் நான் வேண்டுமானால் அந்த அம்மாவிடம் பேசட்டுமா என கேட்டேன். அதற்கு அதெல்லாம் வேண்டும், அவங்க ஒருதடவ முடிவு பண்ணிட்டா அதை மாத்த மாட்டாங்க. நீங்க பேசி உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ள வேண்டாம். அப்படி நான் அங்க சேர வேண்டிய அவசியம் இல்லை என சொன்னார். அந்த மாதிரி ஒரு அற்புதமான மனிதர் அவர். ரியல் கிங் மேக்கர்” என புகழ்ந்து பேசியுள்ளார் ரஜினிகாந்த்.
இதையும் படியுங்கள்... R.M.Veerappan: எம்ஜிஆர் நடித்த தெய்வ தாய் முதல் ரஜினியின் பாட்ஷா வரை! பல படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்!