சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் வெளியாக ஓரிரு நாட்கள் இருந்த நிலையில், இமயமலைக்கு சென்றார். ரஜினிகாந்த் சுமார் 4 வருடங்களுக்கு பின்னர் இமயமலைக்கு சென்றிருந்த நிலையில், முதலில் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி அவர்களுடைய சமாதியில் சென்று வணங்கி அங்கிருந்து தனது பயணத்தை துவங்கிய அவர், இமயமலையில் உள்ள பல இடங்களுக்கு சென்றார்.