ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, கடந்த 2015-ம் ஆண்டு முதல் எந்த படங்களையும் இயக்காமல் இருந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர், மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு லைகா தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.