
டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய உடல் நிலை காரணமாக கட்சி துவங்க வில்லை என்பதை அதிகார பூர்வமாக அறிவித்தார். இதனால் மனமுடைந்த ரசிகர்கள் ஒருவர் ரஜினிகாந்த் வீட்டு முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய உடல் நிலை காரணமாக கட்சி துவங்க வில்லை என்பதை அதிகார பூர்வமாக அறிவித்தார். இதனால் மனமுடைந்த ரசிகர்கள் ஒருவர் ரஜினிகாந்த் வீட்டு முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இம்முறை கண்டிப்பாக ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார் என காத்திருந்த பல்லாயிர கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்த போதிலும், சிலர் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது முடிவை ஏற்று கொள்வதாக கூறினர்.
இம்முறை கண்டிப்பாக ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார் என காத்திருந்த பல்லாயிர கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்த போதிலும், சிலர் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது முடிவை ஏற்று கொள்வதாக கூறினர்.
அதே போல் சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து, கடந்த மூன்று நாட்களாக அவரது வீட்டு முன், அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதே போல் சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து, கடந்த மூன்று நாட்களாக அவரது வீட்டு முன், அரசியலுக்கு வர வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, அரசியலில் இருந்து விலகுவதாக மூன்று பக்க அறிக்கை வெளியிட்ட பின், ரசிகர்கள் ஒருமுறையாவது ரஜினியை சந்தித்து பேச வேண்டும் என முயற்சி செய்து அவர் வீட்டின் முன் குவிந்தும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, அரசியலில் இருந்து விலகுவதாக மூன்று பக்க அறிக்கை வெளியிட்ட பின், ரசிகர்கள் ஒருமுறையாவது ரஜினியை சந்தித்து பேச வேண்டும் என முயற்சி செய்து அவர் வீட்டின் முன் குவிந்தும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ரஜினிகாந்த் அரசியல் குறித்து அறிவித்துவிட்டு தற்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கினால், அவரை பலர் கேலி செய்ய நேரிடும் அதற்காகவாவது தன்னுடைய முடிவை ரஜினி மாற்றி கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
ரஜினிகாந்த் அரசியல் குறித்து அறிவித்துவிட்டு தற்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கினால், அவரை பலர் கேலி செய்ய நேரிடும் அதற்காகவாவது தன்னுடைய முடிவை ரஜினி மாற்றி கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் ரஜினிகாந்த் தங்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்காததால், அதிருப்தியடைந்த சூப்பர் ஸ்டார் ரசிகர் முருகேசன் (55) என்பவர் திடீர் என உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் ரஜினிகாந்த் தங்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்காததால், அதிருப்தியடைந்த சூப்பர் ஸ்டார் ரசிகர் முருகேசன் (55) என்பவர் திடீர் என உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அங்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அங்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.