அல்லு அர்ஜுன்:
நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்த பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த, சைமா விருது நிகழ்ச்சியில், 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த நடிகை நயன்தாராவுக்கு, அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த அவார்டை கொடுப்பதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது உள்ள காதலால், அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லு அர்ஜுனை புறக்கணிப்பது போல் அனைவர் மத்தியிலும், இந்த அவார்டை நான் விக்னேஷ் சிவன் கைகளால் வாங்குவது தான் சரியாக இருக்கும் என கூறி அல்லு அர்ஜுனை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, விக்னேஷ் சிவனை மேடைக்கு வர வைத்து அவருடைய கைகளால் விருதைப் பெற்றார். இந்த சம்பவம் அல்லு அர்ஜுனுக்கு பயங்கரமான இன்சல்ட்டாக பார்க்கப்பட்டது. பலரும் நயன்தாராவின் இந்த செயலை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை நயன்தாராவுக்கு நான்கு முறை வாய்ப்புகள் வந்த போதும்.... நயன்தாரா ஓகே சொல்லியும் அல்லு அர்ஜுன் நயன்தாராவை புறக்கணித்து விட்டார். அன்று நயன்தாராவால் புறக்கணிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன், இன்று பான் இந்தியா லெவலுக்கு சென்று, புஷ்பா படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். கடந்த ஆண்டு Behindwood அவார்ட் நிகழ்ச்சியில், அல்லு அர்ஜுனுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து நயன்தாராவே பிரமித்து போனார். எனவே ரிவெஞ் என்றால் இப்படி இருக்கணும் என ரசிகர்கள் கூறுவது உண்டு.
90ஸ் முதல் 2K வரை - பஞ்சுமிட்டாயை வைத்து கோலிவுட்டில் மெகா ஹிட்டான காதல் பாடல்கள்!