நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை சிவராத்திரி பூஜையில் பங்கேற்றபோது, ரஜினிகாந்தை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு அழைத்து வந்து அங்குள்ள லிங்கத்திற்கு பாலாப்ஷேகம் செய்ய வைக்க வேண்டும் அது தனது நீண்ட நாள் ஆசை என டிரம்ஸ் சிவமணியிடம் கூறி இருந்தாராம்.
இதுகுறித்து இன்று அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்திடமும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினி, “நானும் அதைக் கேள்விப்பட்டேன். அந்த சிவன் கோவில் நிர்வாகிகளிடம் பேசுகிறேன். அது அவரது கடைசி ஆசை என்பதால் நிச்சயம் அதனை நான் நிறைவேற்றுவேன்” என கூறிவிட்டு சென்றார் ரஜினி.
இதையும் படியுங்கள்... Mayilsamy : கடைசி வரை நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை... இதை பார்க்காமலே இறந்துட்டாரே..!