இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து "கூலி" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்க தொடங்கினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் படபிடிப்பு பணிகள் துவங்கிய நிலையில் இடையில் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக சில கால ஓய்வுக்கு பிறகு தற்பொழுது மீண்டும் அவர் கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அந்த திரைப்படம் குறித்து கேட்ட பொழுது, இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மீதம் உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அந்த திரைப்படத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.