அவர் கூறியதாவது : “சமூக வலைதளங்களில் பரவி வரும் அளவுக்கு ஆஸ்கருக்காக நாங்கள் செலவு செய்யவில்லை. கீரவாணி, சந்திரபோஸ், காலபைரவா, ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், ராகுல், பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைத்தது. ஆஸ்கர் விதிப்படி விருது வெல்பவர்கள் மட்டுமே அவருடன் குடும்பத்தினர் ஒருவரை அழைத்து வரலாம். அவர்களுக்கு மட்டுமே இலவச அனுமதி என்பதனால் எஞ்சியுள்ள படக்குழுவினருக்கு டிக்கெட் எடுத்து தான் பங்கு பெற்றோம். அந்த டிக்கெட் விலை ரூ.57 ஆயிரம் முதல் ரூ.1.2 லட்சம் ஆகும்.