பாகுபலி என்கிற பிரம்மாண்ட படைப்பை கொடுத்த ராஜமவுலி, இப்படத்தை அதைவிட பிரம்மாண்டமாக எடுத்திருந்தாலும், திரைக்கதையில் சற்று கோட்டை விட்டுள்ளார். பரப்பாக செல்லும் திரைக்கதை சில இடங்களில் தொய்வை சந்திப்பது தான் சற்று நெருடலாக உள்ளது. மேலும் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாமோ என என்ன தோன்றுகிறது.