தியேட்டரில் வராத 'தாய் கிழவி' பட காட்சிகள்! சென்டிமெண்டும், சுவாரஸ்யமும் நிறைந்த கண்ணீர் வரவழைக்கும் சீன்!

Published : Mar 16, 2026, 08:30 PM ISTUpdated : Mar 16, 2026, 09:36 PM IST

Thaai Kizhavi Deleted Scene : ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி பட காட்சிகளை படக்குழுவினர் இப்போது வெளியிட்டுள்ளனர். அந்த காட்சிகளை பார்க்கும் போது இதை ஏன் டெலிட் பண்ணாங்க என்று கேட்க தோன்றுகிறது.

PREV
15
தாய் கிழவி

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான திரைபடம் தாய் கிழவி.ராதிகாவை மையமாக‌ வைத்து உருவான இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து படமும் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. படக்குழு வெற்றி விழா நடத்தியது. இப்படி இருக்கையில் படம் இதுவரை சுமார் ரூபாய் 70 கோடிகளுக்கும் மேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை படக்குழு யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

25
நீக்கப்பட்ட காட்சி:

தாய்க்கிழவி” திரைப்படத்தைச் சுற்றி தற்போது புதிய விவாதம் ஒன்று உருவாகியுள்ளது.படம் வெளியாகும் போது இடம்பெறாத ஒரு காட்சியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பொதுவாக திரைப்படங்களில் படமா...படமாக்கப்பட்ட சில காட்சிகள் பின்னர் எடிட்டிங் காரணங்களால் நீக்கப்படுவது வழக்கமான ஒன்று. சிறப்பான இந்த காட்சியை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் ஏன் இந்த காட்சியை நீக்கிவிட்டீர்கள் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

35
தாய் கிழவி படத்தின் நீக்கப்பட்ட வீடியோ வெளியீடு

நீக்கப்பட்ட காட்சி: தாய்க் கிழவி திரைப்படத்தில் தன் அம்மாவான டிக்கா மிகவும் கஷ்டப்பட்டார் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மூத்த மகன் அழுது புலம்புவதால் இந்த சீன். அம்மா அப்பாவ கவர்மெண்ட் ஹாஸ்பிடல் வைத்திருக்கப்போ மூத்த மகன் நான் என்ன கையில புடிச்சுகிட்டு லாஸ்ட் பையனும் உன்னை வயித்துல வச்சுக்கிட்டு நம்ம ஊர்ல இருந்து ரெண்டு பஸ்மாறி அப்பாவுக்கு சோறு கொண்டு வந்து கொடுக்கும். அப்போது அப்பாவுக்கு கால் பிரட்டு ஏதாவது வாங்கி சாப்பிடுங்க கைல இருக்குற காசை எண்ணி கொடுத்துட்டு காசே இல்லாமல் அங்க இருந்து நடந்தே வரும். 

45
பஸ் ஏறுவது கூட காசு இல்ல

பஸ் ஏறுவது கூட காசு இல்லாம டீ குடிக்கிற கடையில நான் இந்த பாத்திரத்தை எல்லாம் வேலைக்கு போட்டா நான் பஸ் ஏறுறதுக்கு ஒரு ரூபா குடுப்பீங்களா என்று கேட்டு அது மட்டும் இல்லாம என் பையனுக்கு சாப்பிடுவதற்கு ஒரு பல்லு குடுங்க கேப்பா அதுக்கு அந்த டீக்கடை சாப்பிடுவதற்கானமா கேக்குறேன் எடுத்து சாப்பிட்டு போ என்று சொல்வாரா அதுகூட காதுல வாங்காம வீம்புக்குனே அந்த டம்ளர் எல்லாம் கழுவி ஒரு ரூபா வாங்கி பஸ் ஏறி வீட்டுக்கு வரும் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு அம்மா நம்மள வளத்துச்சுடா . இதுதாண்டா அதுக்கு காரணம் என்று அழுது கொண்டே மிகவும் கவலையாக பேசுவார். இதுதான் அந்த நீக்கப்பட்ட காட்சி மிகவும் சென்டிமெண்டாக இருக்கும் இந்த காட்சியை ஏன் நீக்கி விட்டீர்கள் என்றும் ஒரு அம்மா தன் குழந்தையை வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை தன் மகன் சொல்ல கேட்கும் போது அந்த பட்டை கஷ்டங்கள் எல்லாம் அனைத்தும் தீருமே என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குரு - சீடர் உறவையும் தாண்டி தந்தை - மகன் பாசம்! பாக்யராஜ் - பாண்டியராஜன் இடையிலான நெகிழ்ச்சியான பிணைப்பு!

55
லாபத்தில் பங்கு:

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சமீபத்தில் படக்குழுவினர் வெற்றி விழாவையும் நடத்தினர்.அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பலரும் கலந்து வெற்றியை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய ராதிகா சரத்குமார் இந்த படத்தில் லாபத்தில் பாதி சம்பளம் பெறும் ஒரே ஹீரோயினி நான் மட்டும்தான் எனக்கு மட்டும்தான் இந்த பெருமை உண்டு என்று தனது மகிழ்ச்சியை மனதாரக கூறி மகிழ்ந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரத்துறையில் அனைவராலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயனின் லாபத்தில் சரி பங்கு கொடுக்கிறார் என்று செய்தி பலராலும் பாராட்டப்பட்டது.

கல்யாணம் பண்ணிக்கிறியா? விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் தொடரில் அதிர வைக்கும் காதல் ப்ரொபோசல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories