தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா திரைப்படம் பட்டிதொட்டியெங்கு பட்டைய கிளப்பி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் செம்மரம் கடத்தும் நபராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக படமாக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதேபோல் இப்படத்தில் கூடுதலாக ஒரு வில்லன் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டு அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.