தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான கேங் லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குனர் நெல்சன், தனது இரண்டாவது படமான டாக்டரில் ஹீரோயினாக நடிக்க வைத்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் பிரியங்கா.
இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த பிரியங்காவும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அடுத்ததாக டான் படத்துக்காக மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார் பிரியங்கா.
ஆனால் கடைசி நேரத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதில் அந்த ரோலில் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்ததற்கான முக்கிய காரணம் இயக்குனர் நெல்சன் தான் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி டாக்டர் படத்தில் நடித்தபோதே இயக்குனர் நெல்சனையும் தன்னையும் ஒப்பிட்டு கிசுகிசுக்கள் எழுந்ததாம். நட்பாக பழகி வரும் தங்களைப் பற்றி கிசுகிசுக்கள் எழுவதை விரும்பாத பிரியங்கா மோகன், அதன் காரணமாகவே ஜெயிலர் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... வசூலில் அடித்து நொறுக்கும் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'... இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா?