Published : Jul 08, 2022, 01:56 PM ISTUpdated : Jul 08, 2022, 01:59 PM IST
நடிகை திரிஷாவின் கேரக்டர் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக, அதீத பொருட்செலவில் உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தை, 5 மொழியில் தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிட உள்ளனர்.
26
செப்டம்பர் மாதம் 30-ந் தேதி 'பொன்னியின் செல்வன்' பாகம் -1 வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு இப்போதே துவங்கிவிட்டது.
இதை தொடர்ந்து, தற்போது அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கையில் ஈட்டியை ஏந்தியபடி, போர் வீரனாக உள்ளார்.
66
மேலும் இந்த போஸ்டரில் இன்று மாலை 6 மணிக்கு 'பொன்னியின் செல்வன்' பாகம் 1-ன் டீசர் வெளியாக உள்ளதையும் படக்குழு அறிவித்துள்ளது. சென்னை ட்ரேட் சென்டரில் 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.