பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டில் ரெட் சல்வார் போட்ட பார்பி டாலாக மின்னிய ஐஸ்வர்யா ராய்! சொக்க வைக்கும் போட்டோ

First Published Sep 25, 2022, 3:31 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன் பணியின் போது, நடிகை ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற சல்வாரில்... செக்க சிவந்த பார்பி டால் போல் ரசிகர்களை வசீகரித்த புகைப்படங்கள் இதோ..
 

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில்... வெளியாக உள்ளது.

படம் வெளியாக இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில்... படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

மேலும் செய்திகள்: மறக்க முடியுமா? பாடி மறைந்த நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றிய 15 சுவாரசியமான தகவல்கள்!
 

இந்த படத்தில் நடித்து அணைத்து நடிகர் - நடிகைகளும், முடிந்தவரை இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட பின்னர், நடிகை ஐஸ்வர்யா ராய்... ஹைதராபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட புரொமோஷனிலும், இன்று மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் பணிகளிலும் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்: 'இந்தியன் 2' படத்திற்காக களரி பயிற்சியில் ஈடுபட்ட காஜல் அகர்வால்! உடலை வில்லாக வளைத்து மாஸ் காட்டும் வீடியோ!
 

நேற்றைய புரமோஷன் பணியில்... உலக அழகியான ஐஸ்வர்யா ராய்... சிறப்பு நிற சல்வாரில் செக்க சிவந்த ரோஜா மலர் போல், வந்திருந்தார். அவரது ஹார் ஸ்டைல் மற்றும் அவரை பார்ப்பதற்கு பார்பி பொம்மை போறே இருந்தார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருவதோடு, 45 வயதை கடந்தும்... பேரழகியாக ஜொலிக்கிறார் என கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: முன்பு கருப்பு...தற்போது வெள்ளை..கலர் கலர் கவர்ச்சியில் கண்களை கலங்கடிக்கும் ரம்யா பாண்டியன்
 

பொன்னியின் செல்வன் படத்தில், ஐஸ்வர்யா ராய் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழுவூர் இளவரசியாக நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராய் தான் நந்தினியின் தாய் மந்தாகினி தேவி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் 5 நாட்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து, லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கவர்ச்சி புயலாய் மாறிய கீர்த்தி சுரேஷ்...கண்களில் அனல் பறக்கும் கிக் போஸ்
 

click me!