இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில்... வெளியாக உள்ளது.
இந்த படத்தில் நடித்து அணைத்து நடிகர் - நடிகைகளும், முடிந்தவரை இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
நேற்றைய புரமோஷன் பணியில்... உலக அழகியான ஐஸ்வர்யா ராய்... சிறப்பு நிற சல்வாரில் செக்க சிவந்த ரோஜா மலர் போல், வந்திருந்தார். அவரது ஹார் ஸ்டைல் மற்றும் அவரை பார்ப்பதற்கு பார்பி பொம்மை போறே இருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தில், ஐஸ்வர்யா ராய் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழுவூர் இளவரசியாக நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராய் தான் நந்தினியின் தாய் மந்தாகினி தேவி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் 5 நாட்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து, லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: கவர்ச்சி புயலாய் மாறிய கீர்த்தி சுரேஷ்...கண்களில் அனல் பறக்கும் கிக் போஸ்