தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்தது பொன்னியின் செல்வன். அதனை நனவாக்கியது மணிரத்னம் தான். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்த மணிரத்னம், அதன் முதல் பாகத்தை கடந்தாண்டு ரிலீஸ் செய்து வெற்றி கண்டார். தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படம் ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாக உள்ளதால் அதற்கான புரமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.