அந்த பேட்டியில் விஜகாந்த் குறித்து பேசிய நடிகர், விஜயகாந்த் எனக்கு கடவுள் போல அவரை நான் இன்னும் நேராக சென்று பார்க்கவில்லை. அவரை நேரில் பார்த்தால் செத்துவிட்டேன். எனக்கு கொஞ்ச நாளா இதய நோய், சிறுநீரக நோய் இருக்கு அவரைப் பார்த்தால் என் மனசு தாங்காது. ஒருத்தர் மேல பாசம் வச்சுட்டு அதுவும் அளவு கடந்த பாசம் வைத்து விட்டால் அவர் உடல்நிலை மோசமாக இருக்கும் போது பார்க்க முடியாது. அதனால் தான் நான் இதுவரை விஜயகாந்தை நேரில் பார்க்கவில்லை. அவர் இப்போ நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் அவர்தான் எனக்கு முதல் நபராக உதவி இருப்பார் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் விழாவிற்கு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு !
முன்னணி நடிகரும் ,அரசியல் தலைவருமான விஜயகாந்த் தற்போது உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சர்க்கரை அதிகமானதால் அவரது இரண்டு கால் விரல்கள் துண்டிக்கப்பட்டதாக தேமுதிக கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் தற்போதும் உரிய சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.