நடிகர் ஆர்.கே வீட்டில் திருடிய கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்... 3 பேர் கைது, நகைகள் மீட்பு

Published : Nov 25, 2022, 03:05 PM IST

நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
14
நடிகர் ஆர்.கே வீட்டில் திருடிய கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்... 3 பேர் கைது, நகைகள் மீட்பு

தமிழ் திரைப்படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து அசத்தியவர் ராதாகிருஷ்ணன். சுருக்கமாக ஆர்.கே என்று அழைக்கப்பட்டு இவர், தமிழில் விஜய்யின் ஜில்லா, பாலா இயக்கிய அவன் இவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் ஆர்.கே.

24

இவரது வீட்டில் கடந்த நவம்பர் 10-ந் தேதி கொள்ளைச்சம்பவம் அரங்கேறியது. நடிகர் ஆர்.கே. வேலை காரணமாக வெளியே சென்றபோது, விட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 250 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இதையும் படியுங்கள்... அல்டரா கிளாமர் உடையில்... கண்டமேனிக்கு கவர்ச்சியை காட்டி மூச்சு முட்ட வைக்கும் மாளவிகா மோகனன்!

34

இதையடுத்து அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், அவர்கள் வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்த நேபாளை சேர்ந்த இளைஞர் தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து நடிகர் ஆர்.கே. போலீஸில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரை ஏற்ற போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

44

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 150 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். எஞ்சியுள்ள நகைகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... விஜய்யின் வாரிசு படத்தில் சிம்பு... காத்துவாக்குல வந்த கலக்கல் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories