தமிழ் திரைப்படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து அசத்தியவர் ராதாகிருஷ்ணன். சுருக்கமாக ஆர்.கே என்று அழைக்கப்பட்டு இவர், தமிழில் விஜய்யின் ஜில்லா, பாலா இயக்கிய அவன் இவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் ஆர்.கே.
இதையடுத்து அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், அவர்கள் வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்த நேபாளை சேர்ந்த இளைஞர் தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து நடிகர் ஆர்.கே. போலீஸில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரை ஏற்ற போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.