அவமானம் தாங்க முடியாத நங்கேலி, தன்னிடம் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து, மார்பகம் இருந்தா தான வரி கேட்பாய், நீயே எடுத்துச் செல் எனக் கூறி அதிகாரிகள் முன் தான் அணிந்திருந்த மேலாடையை அவிழ்த்து, தனது மார்பகங்களை அறுத்து தன் முன்னே இருந்த வாழை இலையில் வைத்தால், இதைக்கண்டு அனைவரும் உறைந்து போயினர். வலியால் துடிதுடித்த நங்கேலி, ரத்த வெள்ளத்தில், அங்கேயே சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.
மார்பக வரிக்கு எதிராக சிங்கப்பெண் போல் தனி ஆளாக குரல் கொடுத்து தன் உயிரை தியாகம் செய்த நங்கேலியின் இந்த வீர மரணத்தை பார்த்து ஆடிப்போன அரசாங்கம் உடனடியாக இந்த சட்டத்தை நீக்க உத்தரவிட்டது.