இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் ஆர்.சி 15 ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு படங்களின் வேலைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து வருகிறார் ஷங்கர். இந்த இரண்டு படங்களையும் இயக்கி முடித்த பின்னர் அடுத்ததாக வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.
24
சமீபத்தில் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வெற்றி கண்டதால், அதே பார்முலாவை பின்பற்ற திட்டமிட்டுள்ள இயக்குனர் ஷங்கர், சு.வெங்கடேஷன் எழுதிய வேள்பாரி நாவலை மையமாக வைத்து வரலாற்று படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்கான உரிமையை வாங்கி ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர் பட்டியலில் முதலில் சூர்யா மற்றும் யாஷ் பெயர் உலாவியது. பின்னர் இறுதியாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை ஷங்கர் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இப்படத்தில் ஷங்கர் தமிழ் ஹீரோவை நடிக்க வைக்காதது ஏன் என்கிற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வந்தது.
44
இந்நிலையில், அதற்கு விடையும் கிடைத்துள்ளது. அதன்படி வேள்பாரி கதையை படமாக எடுத்த முடிவு செய்ததும், நடிகர் விஜய்யை தான் அப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் ஆசைப்பட்டாராம். அதோடு இப்படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தான் முதலில் அணுகி இருந்தாராம். ஆனால் அவர்களோ படத்தின் பட்ஜெட்டை கேட்டு சற்று ஜகா வாங்கியதால், பாலிவுட் தயாரிப்பாளரை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டுவிட்டாராம் ஷங்கர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.