Aishwarya Rai: உதட்டில் முத்தம்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

First Published Nov 16, 2022, 11:06 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து ஷேர் செய்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த, பபுகைப்படத்தை வெளியிட்ட போது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், மீண்டும் இதே போன்று புகைப்படத்தை ஷேர் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான விஷயம் என்றே கூறலாம். பாசம் கொடுக்கிறோம் என்கிற பெயரில் அவர்களை ஒருபோதும் உளவியல் ரீதியாக உங்கள் அன்பு பாதித்துவிட கூடாது. நாம் செய்யும் சிறு விஷயங்கள் கூட அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கலாம் என்பது போன்ற காரணங்களை சுட்டி காட்டி தான் தற்போது, ஐஸ்வர்யா ராய் அவருடைய மகளுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த விஷத்தை நெட்டிசங்கள் விமர்சித்து வருகிறார்கள்.

கண்ணே பட்டுடும்... செம்ம கியூட்! இதுவரை யாரும் பார்த்திடாத குழந்தை பருவ அரிய புகைப்படங்களை வெளியிட்ட க்ஷெரின்!
 

Aishwarya Rai

ஒரு தரப்பினர், ஐஸ்வர்யா ராய் தன மகள் மீது உள்ள அலாதியான பாசத்தின் காரணமாகவே...  மகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார்... இதில் என்ன தவறு இருக்கிறது என அவருக்கு ஆதரவாக தங்களுடைய கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
 

மற்றொரு தரப்பினர், அன்பை வெளிப்படுத்த... உதட்டில் முத்தமிடவேண்டும் என்பது இல்லை. கன்னம், நெற்றி போன்ற இடங்களில் கூட கொடுக்கலாம்... குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு, பெற்றோர் உதவில் முத்தம் கொடுப்பதால் அவர்கள் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என கூறி ஐஸ்வர்யா ராய்யின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியது ஏன்? நடிகர் சாய் தீனா கூறிய பரபரப்பு விளக்கம்.!
 

மகள் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி, ஐஸ் கொடுத்த ஒற்றை முத்தத்தின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, பல்வேறு விவாதங்களுக்கும் ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!