தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். குறிப்பாக சமீபத்தில் இவர் ஒரே ஷாட்டில் படமாக்கிய இரவின் நிழல் திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கோமாளி படத்தின் போது தான் பஞ்சாயத்து பண்ணியதாகவும், அதனை மனதில் வைத்துக்கொண்டு தன்னை சீண்டும் வகையில் லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் டயலாக் வைத்திருந்தது பற்றியும் பார்த்திபன் கூறி உள்ளார்.