Pandian Stores 2: முடிவுக்கு வந்த சிறை வாசம்.! பண்டியன் குடும்பத்தின் உணர்ச்சிகரமான ரீ-என்ட்ரி! தங்கமயிலுக்கு விழுந்த பலத்த அடி!

Published : Jan 08, 2026, 11:26 AM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜாமினில் வெளிவந்த பாண்டியன் குடும்பத்தினரை கோமதியின் அண்ணன் ஆறுதல் படுத்துகிறார். வீட்டிற்கு வந்ததும், இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமான மயில் இனி வீட்டிற்குள் நுழைய கூடாது என்று சரவணன் சபதம் எடுக்கிறான். 

PREV
18
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அண்ணன் - தங்கை பாசம்.!

வழக்கில் ஜாமின் கிடைத்த பிறகு, பாண்டியனும் அவரது மகன்களும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வருகிறார்கள். அப்போது அங்கே காத்திருக்கும் கோமதியின் அண்ணன் (பழனிச்சாமி), பாண்டியனிடம் மிகவும் கனிவாகப் பேசுகிறார். "எதற்கும் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன்" என்று அவர் பாண்டியனுக்கும் கோமதிக்கும் ஆதரவாகப் பேசுகிறார்.

28
நெகிழ்ந்து போன பாண்டியன்

இதைக் கேட்டு நெகிழ்ந்து போன பாண்டியன், தனது மைத்துனரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறார். அண்ணனின் பாசத்தைக் கண்டு உருகிய கோமதி, "எப்போதும் வெட்டுவேன் குத்துவேன் என்று பேசினாலும், ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் எங்களுக்காக வந்து நிற்கிறாயே அண்ணா" என்று கூறி, அண்ணன் மீது சாய்ந்து கதறி அழுகிறார். இந்தச் சம்பவம் அந்த இடத்தில் ஒரு நெகிழ்ச்சியான சூழலை உருவாக்கியது.

38
வீட்டு வாசலில் ஆரத்தி வரவேற்பு

அண்ணனின் ஆறுதலுக்குப் பிறகு அனைவரும் வீட்டிற்குப் புறப்படுகிறார்கள். அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்ததும், கோமதி தன் கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு நேர்ந்த அவமானங்கள் நீங்க வேண்டும் என்பதற்காக ஆரத்தி எடுத்து அவர்களை வீட்டிற்குள் வரவேற்கிறார். ஒரு பெரிய இக்கட்டான சூழலில் இருந்து குடும்பத்தினர் மீண்டு வந்த நிம்மதி எல்லோரிடமும் தெரிகிறது.

48
பாண்டியனின் மனவேதனையும் கோமதியின் ஆறுதலும்

வீட்டிற்குள் சென்று அனைவரும் சாப்பிட அமர்கிறார்கள். அப்போது பாண்டியன் மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கி மிகவும் வேதனைப்படுகிறார். "என் வாழ்நாளில் தவறு செய்யாதவன் நான். ஆனால் இப்போது அடிக்கடி கோர்ட், ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டே இருக்க வேண்டுமே" என்று கூறி கண்ணீர் மல்குகிறார்.

58
கண்கள் கலங்கிய கோமதி

கணவரின் அழுகையைப் பார்க்க முடியாமல் கோமதியும் அழுதுகொண்டே அவருக்கு ஆறுதல் கூறுகிறார். "நாம் எல்லோரும் நம் மனசாட்சிப்படி தான் நடந்து கொள்கிறோம். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்கவில்லை. அதனால் கடவுள் நம்மைக் கைவிடமாட்டார்" என்று கூறி பாண்டியனைத் தேற்றுகிறார்.

68
சரவணனிடம் மன்னிப்பு கேட்ட பாண்டியன்

உணவருந்தும் போது பாண்டியன் தனது மூத்த மகன் சரவணனைப் பார்த்து மிகவும் வருந்துகிறார். "உன் வாழ்க்கையைச் சிறப்பாக்கப் போய் தான் இன்று இவ்வளவு பெரிய அவமானம். என்னை மன்னித்துவிடு சரவணா" என்று ஒரு தந்தையாகத் தாழ்ந்து போய் மன்னிப்பு கேட்கிறார்.

78
மயில் மீது சரவணனின் கடும் கோபம்

பாண்டியன் மன்னிப்பு கேட்டதும் சரவணன் ஆவேசமடைகிறார். இந்தச் சிக்கல்கள் அனைத்துக்கும் காரணமான தங்கமயிலின் தாய் மயில் மீது அவருக்கு அளவு கடந்த கோபம் வருகிறது. "இனி என்ன ஆனாலும் சரி, அந்த மயில் இந்த வீட்டிற்குள் நுழையவே கூடாது. அவர் முகம் கூட என் கண்ணில் படக்கூடாது" என்று சரவணன் மிகவும் தீர்மானமாகக் கூறுகிறார். சரவணன், தனது தந்தையையே போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்தவர் மீது தனக்கு எந்த இரக்கமும் இல்லை என்பதில் சரவணன் உறுதியாக இருக்கிறார்.

88
எல்லாத்தையும் நான் பார்த்துகொள்கிறேன்.!

எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என பண்டியன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அமைதியாக யோசனையுன் அமர்ந்திருப்பதுடன் முடிகிறது சீரியல்.!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories