கண்முன்னே கணவரை பறிகொடுத்த பல்லவி
கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். மஞ்சுநாத்துடன் பரத் பூஷன் என்பவரும் கொல்லப்பட்டார். 46 வயதாகும் மஞ்சுநாத், தன்னுடைய மனைவி பல்லவியுடன் தங்கள் முதல் வெளிமாநில குடும்ப விடுமுறையைக் கொண்டாட காஷ்மீர் சென்றிருக்கிறார். மகன் அபிஜித்தின் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகுதான் மஞ்சுநாத் காஷ்மீர் பயணத்திற்கு முன்பதிவு செய்திருக்கிறார்.
ஏப்ரல் 19ந் தேதி சிவமோகாவிலிருந்து சென்ற ஒரு குழுவில் மஞ்சுநாத்தும் அவரது குடும்பத்தினரும் காஷ்மீர் சென்றனர். மல்னாடு அரேகா மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கத்தின் பிரூர் கிளையின் கிளை மேலாளராக பல்லவி உள்ளார். மகனுக்கு உணவு வாங்கச் சென்றபோதுதான் மஞ்சுநாத்தை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்