மற்ற ஜோடிகள் போலவே இவர்களின் காதல் கதைக்கும் வெளியில் வந்தவுடன் முற்று புள்ளி வைக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் யார் யாரை விடவில்லை என தெரியவில்லை. இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்தது முதல் டான்ஸ் ஷோக்கள், விளம்பரங்கள் என ஜோடியாக கலக்கி வந்தனர். அதுபோக பிபி சீசன் 2விலும் பங்கேற்று வருகின்றனர்.
ஏற்கனவே பவானி அமீரை பிடிக்கும்..காதலை சொல்ல சிறுது காலம் எடுக்கும் என சொல்லியிருந்த வேளையில், சமீபத்திய எபிசோடில் பவானிக்கு மல்லிகை பூவும், பட்டு புடவையும் தான் பிடிக்கும் என கூறி ஸ்கோர்களை அள்ளி உள்ளார் அமீர்.