இந்நிலையில், சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா, இயக்குனர் மணிரத்னம் கையால் விருதை வாங்கினார். அப்போது தான் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியது குறித்து பேசினார். அதன்படி, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும். எனக்கும் அவர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அது கைநழுவிபோனது. ஆனால் எதிர்காலத்தில் அவர் படத்தில் நடிப்பேன்” என கூறினார்.