நடிகை நயன்தாரா இந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொண்டார். பொதுவாகவே திருமணத்துக்கு பின்னர் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்காது. ஆனால் நயன்தாரா அப்படியல்ல. திருமணமான பின்னர் தான் அவர் அதிகளவிலான படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் பட தயாரிப்பிலும் இறங்க உள்ளார். அவர் தயாரிப்பில் உருவாக உள்ள முதல் படத்தை மேயாத மான், ஆடை, குளுகுளு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் தான் இயக்க உள்ளாராம். இப்படத்தில் தான் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.