தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக கலக்கி வரும் நடிகை நயன்தாராவுக்கு இந்த ஆண்டு மிகவும் ஸ்பெஷலான ஆண்டு. ஏனெனில் இந்த வருடம் தான் அவர் தனது நீண்ட நாள் காதலனனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. அதுவும் இரட்டை குழந்தைகள் என்பதால் விக்கி - நயன் ஜோடி டபுள் சந்தோஷத்தில் உள்ளனர்.
குழந்தை பிறந்த தகவலை வெளியிட்ட பின்னர் நயன்தாரா நடிக்கும் படங்கள் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், ஒரு மாத இடைவெளிக்கு பின்னர், நயன்தாரா ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அவர் நடித்துள்ள கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தான் கோல்டு படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. கடந்த செப்டம்பர் மாதமே ரிலீசாக இருந்த இப்படம், பணிகள் முடிவடையாமல் இருந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து பிளாப் ஆன படங்கள்... அமீர்கான் எடுத்த அதிரடி முடிவு - அஜித் போல் பிரேக் எடுக்க திட்டம்