ஏனெனில் நான் தனியா இருந்தா நல்லா இருப்பேன், நீங்க தனியா இருந்தா நல்லா இருப்பீங்க. இல்லேனா பையனை யாரிடமாவது வளர்க்க கொடுத்துவிடலாம்னு சொன்னார். நான் அதெல்லாம் வேண்டாம், நீங்க தனியாவே இருங்க, நான் என் பிள்ளையோடு இருந்துக்கிறேன்னு சொல்லிட்டு என் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். அதன் பின்னர் நாங்கள் நல்லா இருக்கோம். இதுல ஜோசியத்தை தப்பு சொல்ல முடியாது.
இதேபோல் எனக்கு 14 வயது இருக்கும் போது எனக்கு உடம்பெல்லாம் சிரங்கு இருந்ததாம், மருத்துவம் பார்த்தும் குணமடையாததால், ஜோசியரிடம் சென்று கேட்டபோது, அவர் சொன்னது, அவ ரோஜாப்பூ மாதிரி மலரபோரா, விமானத்தில் பறந்து பறந்து வேலை பார்க்க போறா, அவதான் முதல்ல ஜப்பான் கார் வாங்குவானுலாம் சொல்லிருக்காரு. அவர் சொன்னபடியே சினிமாவில் நடித்து பிரபலமாகி முதன்முதலில் நான் தான் ஜப்பான் கார் வாங்கினேன்.