வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று

Published : Jul 12, 2022, 03:20 PM ISTUpdated : Jul 12, 2022, 03:22 PM IST

வெயிலோடு விளையாடு பாடல் நம் சிறுபிள்ளை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் நம் ஆட்டோகிராப் ஆகவே அமைந்தது. அதோடு உருகுதே மருகுதே என காதல் பொங்கும் பாடல் வரிகளை தந்து இருந்தார் நா.முத்துக்குமார்.

PREV
13
வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று
Na Muthukumar

90களின் பிற்பாடுகள் இருந்த 2000 களின் முற்பாதி வரை அர்த்தம் பொதிந்த பாடல் வரிகளை தமிழுக்கு தந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கவிஞர் நா முத்துக்குமார். வெயில் முதல் தந்தையின் முத்தம் வரை ஒவ்வொன்றிற்கும் அழகான மனம் உருகும் அர்த்தங்களை கொடுத்த கவிஞர் தங்க மீன்கள் மற்றும் சைவம் படத்திற்காக இருமுறை தேசிய விருதுகளை வென்றார்.

மேலும் செய்திகளுக்கு..கேப்டன் மில்லர் படத்துக்காக லுக்கை மாற்றிய தனுஷ்... வெறித்தனமா இருக்கே என சிலாகிக்கும் ரசிகர்கள்

23
Na Muthukumar

ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப் பிரபலம். அன்பு சொட்டு சொட்ட படைத்திருந்தார் முத்துக்குமார். ஆனந்தயாழை, யாருக்கும் தோல்வி இல்லை ஃபர்ஸ்ட் லாஸ்ட் என ஒவ்வொரு பாடல்களும் இன்றளவும் பிரபலமாக உள்ளன.

மேலும் செய்திகளுக்கு..கேப்டன் மில்லர் படத்துக்காக லுக்கை மாற்றிய தனுஷ்... வெறித்தனமா இருக்கே என சிலாகிக்கும் ரசிகர்கள்

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தில் இவர் எழுத்து வண்ணத்தில் உருவான வெயிலோடு விளையாடு பாடல் நம் சிறுபிள்ளை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் நம் ஆட்டோகிராப் ஆகவே அமைந்தது. அதோடு உருகுதே மருகுதே என காதல் பொங்கும் பாடல் வரிகளை தந்து இருந்தார் நா.முத்துக்குமார்.

கோவில் படத்தில் கல்லூரிக்கு போறோம், கில்லி-சூர தேங்கா, அருள் - உக்கடத்து பாபடமே, புன்னக்குன்னு, 7ஜி ரெயின்போ காலனி, காதல், மன்மதன் - காதல் வளர்த்தேன் என காதல்,சோகம், நட்பு, பிரிவு என மனிதத்தின் மொத உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் நா. முத்துக்குமார்.

33
Na Muthukumar

இறுதியாக இவர் எழுத்து வடிவத்தில்  2.0 விலிருந்து புள்ளினங்கால், சர்வம் தாள மயம் படத்திலிருந்து மாய மாயா, பெட்டிக்கடையிலிருந்து  சாமிகிட்ட ஆகிய பாடல்கள் வெளியாகி இருந்தன.இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வந்த முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

மேலும் செய்திகளுக்கு..அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!

 பின்னர் கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய இவருக்கு பாடல் ஆசிரியர் வாய்ப்பு கிடைத்தது.மலபார் போலீஸ்மூலம் பாடலாசிரியர் ஆனார். 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர் நீண்ட நாள்களாக  மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார்.. இதை அடுத்து தனது 41 வது வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இன்று நாம் முத்துக்குமாரின் 47 வது பிறந்தநாள்.

Read more Photos on
click me!

Recommended Stories