இசையுலகின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. இவரது பாடல் பிடிக்காத ஆளே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டுள்ளார் இளையராஜா. அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் பயணம், 40 ஆண்டுகளைக் கடந்து இன்று விடுதலை வரை நீடித்து வருகிறது. இசை மீதான தீராத காதலால், தற்போது 80 வயதை எட்ட உள்ள நிலையிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறார் இளையராஜா.