கொலவெறி என்கிற ஒரே பாடல் மூலம் உலகளவில் பேமஸ் ஆனவர் அனிருத். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக அனிருத் இசையில் தனுஷ் பாடிய இப்பாடல் உலகளவில் வைரல் ஆனது. முதல் பாடலிலேயே கவனம் ஈர்த்த அனிருத், அடுத்தடுத்து விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.