அதுமட்டுமின்றி அப்படம் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜெய் பீம் படம் பார்த்த பிறகு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஏனெனில் பொய் வழக்கு போட்டு ஒரு கைதியை ஜெயில்ல அடச்சு. போலீஸ் எந்த அளவுக்கு காட்டுத்தனமாக நடத்தியது, கொடுமைப்படுத்தியது என்பதை பார்த்து ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன்.
அதற்கு காரணம் என்னவென்றால், நான் மிசால இருந்தப்போ, நானும் அந்த கொடுமையை அனுபவிச்சேன். அந்த படம் பார்க்கும்போது அது நினைவுக்கு வந்தது. அதனால படம் முடிஞ்ச உடனே சூர்யாவுக்கு போன் பண்ணி பாராட்டினேன். இயக்குனரையும் அழைத்து பாராட்டினேன். அதுதான் நான் முதலமைச்சர் ஆனபிறகு பார்த்த முதல் படம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் மு.க.ஸ்டாலின்.
இதையும் படியுங்கள்... 7 ஹீரோயின்களை பாடாய்படுத்திய பிரபுதேவா... ரசிகர்களை மகிழ்வித்தாரா? - பஹீரா படத்தின் விமர்சனம் இதோ