இந்நிலையில், நடிகை நோரா பதேஹி சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது : “எனது முதல் இந்தி படமான ரோர் : தி டைகர் ஆஃப் சுந்தர்பேன்ஸ் என்கிற படத்தின் படப்பிடிப்பு வங்கதேசத்தில் உள்ள காடுகளில் நடைபெற்றபோது அதில் என்னுடன் நடித்த சக நடிகர் தவறாக நடக்க முயன்றார். அத்துமீறி நடந்துகொண்ட அவருக்கு ஓங்கி கன்னத்தில் ஒரு அறை வைத்தேன்.