பீப் சாங் சர்ச்சைக்கு பின்... மீண்டும் அனிருத் உடன் கூட்டணி அமைத்த சிம்பு - அதுவும் யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

First Published Mar 3, 2023, 11:36 AM IST

பீப் சாங் சர்ச்சைக்கு பின் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த சிம்புவும், அனிருத்தும் தற்போது புதிய படம் ஒன்றின் மூலம் மீண்டும் இணைய உள்ளார்களாம்.

தமிழ் திரையுலகில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் சிம்பு. இவர் கடந்த 2015-ம் ஆண்டு இசையமைப்பாளர் அனிருத் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து பீப் சாங் என்கிற பெயரில் ஒரு சுயாதீன பாடல் ஒன்றை பாடி இருந்தார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்த இப்பாடலுக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி இப்பாடலை பாடிய சிம்புவையும், இசையமைத்த அனிருத்தையும் கைது செய்ய வேண்டும் என கண்டனக் குரல்களும் எழுந்தன.

சிம்புவும், அனிருத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இந்த பீப் சாங் சர்ச்சைக்கு பின் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் அனிருத் உடன் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளார் சிம்பு. இவர்கள் இருவரும் முதன்முறையாக படத்தில் இணைந்து பணியாற்ற தயாராகி உள்ளனர். இதுகுறித்த தகவல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இதையும் படியுங்கள்... பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்டி... நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் - வைரலாகும் போட்டோஸ்

தற்போது நடிகர் சிம்பு பத்து தல என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சிம்பு நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தான் அனிருத் இசையமைக்க உள்ளாராம்.

சிம்புவும், அனிருத்தும் முதன்முறையாக இணைய உள்ளதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோலிவுட்டில் தற்போது டாப் பார்மில் இருக்கும் அனிருத், விஜய்யின் லியோ, அஜித்தின் ஏகே 62, ரஜினியின் ஜெயிலர் மற்றும் தலைவர் 170, கமலின் இந்தியன் 2, ஷாருக்கானி ஜவான் போன்ற டாப் நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது சிம்பு படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... திடீரென சுவர் ஏறி குதித்து ஷாருக்கான் வீட்டுக்குள் நுழைய முயன்ற 2 பேர் கைது- காரணம் கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்

click me!