மலையாள நடிகையான பூர்ணா கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு. இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூர்ணா. இதையடுத்து தகராறு, கந்தக்கோட்டை போன்ற படங்களில் நாயகியாக நடித்த இவருக்கு தமிழில் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை.
25
இதனால் அடங்கமறு, காப்பான், தலைவி என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இதுதவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து அசத்திய நடிகை பூர்ணாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து கர்ப்பமான நடிகை பூர்ணாவுக்கு கடந்த மாதம் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்டது. இதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் பூர்ணா. இதில் அவரது உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு நடிகை பூர்ணாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
45
இந்நிலையில், தற்போது நடிகை பூர்ணாவுக்கு பாரம்பரிய முறைப்படி மீண்டும் வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் கன்னூரில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்டி நடிகை பூர்ணாவுக்கு அவரது குடும்பத்தினர் எளிமையாக வளைகாப்பு ஒன்றை நடத்தி உள்ளனர்.
55
இந்த வளைகாப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை பூர்ணா, தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகை பூர்ணாவின் இந்த வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.