MGR - Saroja Devi : காத்திருந்த எம்ஜிஆர்.! காதலை நிராகரித்த சரோஜா தேவி.! முன்னணி ஹீரோக்களிடமே கெத்து காட்டிய கன்னடத்து பைங்கிளி.!

Published : Mar 02, 2026, 09:09 AM IST

எம்.ஜி.ஆரையே காத்திருக்க வைத்த 'கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி, உச்ச நட்சத்திரங்களின் காதலை நிராகரித்து, அம்மாவின் சொல்லுக்காகத் திரையுலக திருமணத்தைத் தவிர்த்த சுவாரசியமான பின்னணி இதோ!

PREV
15
நடிப்பாலும் அழகாலும் மனதை மயக்கிய தேவதை

1960-களின் தமிழ் திரையுலகில் 'சரோஜாதேவி' என்ற பெயர் ஒரு மந்திரச் சொல். வசூலில் மகுடம் சூட்டிய இந்த 'கன்னடத்து பைங்கிளி', ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்து, ஒரே நேரத்தில் 30 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாக இருந்தவர். அந்த காலகட்டத்தில் எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், சரோஜாதேவியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆச்சரியமான தகவல் என்னவென்றால், நேரத்தை உயிராக மதிக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரே பலமுறை சரோஜாதேவியின் வருகைக்காக படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்தாராம்.

25
வரிசைகட்டி நின்ற காதல் மன்னர்கள்!

அபிநய சரஸ்வதியின் அழகிலும், அவரது துறுதுறுப்பான நடிப்பிலும் மயங்காதவர்களே இல்லை. அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலரும் சரோஜாதேவியிடம் தங்கள் காதலைத் தெரிவித்து, அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் காட்டினர். ஆனால், அவர்கள் யாருடைய காதலையும் சரோஜாதேவி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எத்தனையோ 'காதல் மன்னர்கள்' தூது அனுப்பியும், எதற்கும் அசையாமல் தன் வேலையில் மட்டுமே குறியாக இருந்தார்.

35
ஏன் இந்த வைராக்கியம்?

திரையுலகைச் சேர்ந்த யாரையும் ஏன் காதலிக்கவில்லை என்பதற்குப் பின்னால் ஒரு உருக்கமான செண்டிமெண்ட் ரகசியம் ஒளிந்திருக்கிறது. ஒரு பழைய நேர்காணலில் அவரே இதைப் பகிர்ந்துள்ளார். "நான் எப்போதுமே என் அம்மாவின் பேச்சை மீறியதில்லை. நான் சினிமாவுக்கு வரும்போதே, 'கலைத்துறையைச் சேர்ந்த எவரையும் திருமணம் செய்யக்கூடாது' என்று அம்மா சத்தியம் வாங்கிக்கொண்டார். உனக்குப் பின்னால் உன் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள், உன் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் எனவும்  சரோஜா தேவி தெரிவித்தார்.

45
சினிமா வாழ்க்கை நிலைக்காது!

மேலும், திரையுலகில் நடக்கும் திருமணங்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை என்ற ஒரு அச்சமும் அவரிடம் இருந்தது. புகழின் உச்சத்தில் இருந்தபோதே, 1967-ல் பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ ஹர்சாவை திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார். தன் குடும்பத்திற்காக, அம்மாவின் சொல்லுக்காக ஒட்டுமொத்தத் திரையுலகின் காதலையும் நிராகரித்த சரோஜாதேவி, இன்றும் கண்ணியமான நடிகையாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

55
சரோஜா தேவி ஒரு சூப்பர் ஸ்டார் தான்!

சரோஜா தேவி திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகியபோது, அது ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் கழித்து 'ஒன்ஸ்மோர்' படத்தில் சிவாஜியுடனும், 'ஆதவன்' படத்தில் சூர்யாவுடனும் நடித்தபோது, அந்த பழைய வசீகரம் குறையாமல் அப்படியே இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. வெறும் கனவுக்கன்னியாக மட்டும் இல்லாமல்  "அம்மாவின் பேச்சை மீறாத மகள்", "குடும்பத்தைக் காக்க காதலைத் துறந்த தியாகி" எனப் பன்முக அடையாளங்களோடு நிஜ வாழ்விலும்  சரோஜா தேவி ஒரு சூப்பர் ஸ்டார் தான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories